"மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் மாநிலங்கள் ஊரடங்கு அறிவிக்க கூடாது!"- மத்திய அரசு

மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் எந்த மாநிலங்கழும் ஊரடங்கை அறிவிக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் எந்த மாநிலங்கழும் ஊரடங்கை அறிவிக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது.

தற்பொழுது 3 -ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இது வருகின்ற 31 -ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இந்தநிலையில், மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 31- ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில், மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் எந்த மாநிலங்கழும் ஊரடங்கை அறிவிக்க கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.