மசூதிகளில் ஒலிபெருக்கி இயக்க தடை.! அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு.!

மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் வழிபாடுகளை ஒலிபரப்ப தடைவிதித்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்ளது.
மசூதிகளில் இஸ்லாமிய முறைப்படி அசான் எனும் வழிபாடு நடத்தப்படும் .இதனை ஒலிபெருக்கி மூலம் மசூதிகளில் ஒலிபரப்புவார்கள். ஆனால், இந்த ஒலிபெருக்கி மூலம் அசான் வழிபாடு நடத்த தடை விதித்தும், அதே போல, அசான் வழிபாடு நடத்துவதே இஸ்லாமிய வழிபாடு தவிர, ஒலிபெருக்கி மூலம் வழிபாடு நடத்துவது அல்ல எனவும், ஆதலால், மசூதிகளில் அசான் வழிபாடு நடத்தலாம் . ஆனால்,அதனை ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்ப கூடாது என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.