கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல் வழக்கு.. கைது செய்யப்பட்ட ஸ்வப்னா என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்!

கேரளாவில் தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா, மற்றும் சந்தீப் நாயரை என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலை ஆய்வு செய்தனர். அதில் சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்க கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். அப்பொழுது அவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நேரடியாகவோ, மறைமுகவாகவோ இந்த தங்கக்கடத்தலில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பெங்களுருவில் நேற்று இரவு ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை கைது செய்து இன்று மதியம் என்ஐஏ அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் இன்று மதியம் 3 மணிக்கு மேல் ஆஜர் படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கொச்சினில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025