விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.1 கோடி! டாடா குழும தலைவர் சந்திரசேகரன் அறிவிப்பு !
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டாடா குழுமம் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

குஜராத் : அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட Air India விமானம் AI171, புறப்படுதலுக்கு சில நிமிடங்களில் மேகனிநகர் குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 242 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட மொத்தம் 254 பேரில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சோக நிகழ்வில், விஸ்வாஸ் மிகுமார் என்ற ஒரே ஒரு பயணி மட்டுமே அதிசயமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்நிலையில், டாடா குழும தலைவரும் Air India தலைவருமான என். சந்திரசேகரன், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சந்திரசேகரன், இந்த விபத்து குறித்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, “Air India விமானம் AI171 இன்று ஒரு பயங்கர விபத்தில் சிக்கியது குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். இந்த சோக நிகழ்வால் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பது எங்களது முதன்மை கவனமாக உள்ளது. அவசர மீட்பு குழுக்களுக்கு உதவுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதற்கும் நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்,” என்று அறிக்கையில் கூறினார். மேலும், அவர் அவசர மையம் ஒன்று செயல்படுத்தப்பட்டு, குடும்பங்களுக்கு தகவல் வழங்குவதற்காக ஆதரவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தினார்.
அதே சமயம் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தவுடன் பகிரப்படும் என்றும் சந்திரசேகரன் தெரிவித்தார்.
We are deeply anguished by the tragic event involving Air India Flight 171.
No words can adequately express the grief we feel at this moment. Our thoughts and prayers are with the families who have lost their loved ones, and with those who have been injured.
Tata Group will…
— Tata Group (@TataCompanies) June 12, 2025