ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் : ஜனாதிபதி, பிரதமர் கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் : ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்கள் சென்ற தனியார் பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 33 பேர்

Droupadi Murmu - PM Modi

ஜம்மு காஷ்மீர் :ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்கள் சென்ற தனியார் பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர், பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பேருந்தை குறிவைத்து தாக்கிய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நள்ளிரவிலும் இந்திய ராணுவம் ஹெலிகாப்டரில் சென்று தேடுதல் வேட்டையில் இறங்கியது.

தற்போது, இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, பிரியங்கா காந்தி வத்ரா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.