ஜம்மு காஷ்மீர் அனந்த் நாக் அருகே அர்வானியில் நடந்த என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை.
ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் அர்வானி நகரின் முமன்ஹால் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலீடு கொடும் விதமாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
unknown node