ஆந்திரப் பிரதேசம்:அனகப்பள்ளி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி மேடையில் வைத்து கோழியை உயிருடன் கடித்துக்கொன்ற நடனக் கலைஞர் விஷ்னு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் போது கோழியின் தலையை கடித்து நடனக் குழு நடனமாடியதைக் காட்டும் வீடியோ வெளியானதால் சர்ச்சை தொடங்கியது. வீடியோவில், நடுவில் நடனக் கலைஞர் ஒருவர், சிவப்பு நிற சேலை அணிந்த ஒரு கோழியை தூக்கிச் செல்லும் போது, அந்த குழு மேடையில் நடனமாடுவதைக் காணலாம்.
அப்போது, நடனக் கலைஞர் முன்னால் வந்து அந்த கோழியின் தலையைக் கடித்து ஆக்ரோஷத்துடன் துப்புகிறார், ரத்தம் தெறிக்கும்படி அமைந்திருக்கும் இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் பொதுமக்களின் பார்வைக்கு வந்தது.
குழந்தைகள் உட்பட பெரியவர்கள் முன்னிலையில் கோழியை கடித்து கொன்றது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், நடனக் குழுவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் கோழியின் தலையை கடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், PETA அமைப்பு போலீசில் புகார் அளித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
unknown node