ஓடும் காரில் குடித்துவிட்டு புஷ்-அப்…ரகளை செய்த கும்பல்…அதிரடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார்.!!

Gurugram

குருகிராமில் ஓடும் காரின் மேல் ஒருவர் அமர்ந்து மது குடித்துக்கொண்டும்,  மேலும் 3  பேர் ஜன்னல்களுக்கு வெளியே தலையை நீட்டியவாறும், ஒருவர் புஷ்-அப் செய்துகொண்டவரும் வைரலான வீடியோ தொடர்பாக ஹரியானா போலீசார் இருவரை கைது செய்தனர்.

இது தொடர்பாக வைரலாகும் வீடியோவில் ” சாலையில்  கார் ஒன்று போய்க்கொண்டுகிறது அதில்  ஒரு நபர் காரின் மேல் மது அருந்துவதை காணலாம். அதே சம்பவத்தின் மற்றொரு வீடியோவில், மேலே இருக்கும் நபர் நகரும் காரின் மேல்  புஷ்-அப் செய்வதைக் காணலாம். பின்னர், மேலும் மூன்று ஆண்கள் கார் கண்ணாடிகள் வழியாக தலையை வெளியே நீட்டிக்கொண்டுள்ளனர்.


இந்த நிலையில், இந்த சம்பவத்தின் 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  கைது செய்யப்பட்டவர்கள் தயா சந்த் (34) மற்றும் சூரஜ் தாகர் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இதனை தொடர்ந்து நகர காவல்துறையும் காரின் உரிமையாளருக்கு ரூ.6,500 அபராதம் விதித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்