அடுத்த ஆபத்து.! வருகிறது “ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ” அசாமில் 13,000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

அசாமில் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கு இதுவரைக்கும் 13,000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயால் பெரும் இழப்பை சந்தித்து வருகிறோம். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில், நாட்டின் முதன்முறையாக அசாம் மாநிலத்தில் புதிதாக கண்டறியப்பட்டு இருக்கும் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கு இதுவரைக்கும் 13,013 பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் அசாமில் அரசு பன்றிகளை அழிக்காமல் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலில் இருந்து பன்றிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் பன்றிகளின் உயிரிழப்புக்கு காரணமான ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் இருந்துதான் பரவியது என்று கூறப்படுகிறது. இந்த பன்றி காய்ச்சல் முதலில் அருணாசலப் பிரதேசத்தில் தாக்கியது. இதைத்தொடர்ந்து தற்போது அசாமில் பன்றிகளை கொன்று வருகிறது. பின்னர் இந்த ப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கும் தற்போது கொன்று குவித்து வரும் கொரோனா வைரசுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் வைரஸ் மனிதர்களின் உடலில் தங்கி இருந்து பன்றிகளை கொல்லக்கூடியது. 

மேலும், நாட்டிலேயே முதலில் அசாமில்தான் இந்த ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ வைரசுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அசாமில் இதுவரை 13,013 பன்றிகள் உயிரிழந்துள்ளது. இதையடுத்து அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அதுல் போரா காஸிரங்கா அங்குள்ள தேசிய பூங்காவிற்கு சென்று பன்றிகள் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அதன்பின் பேசிய அவர், காட்டுப் பன்றிகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்கவும், வீட்டுப் பன்றிகள் பூங்காவுக்குள் நுழையாமல் இருக்கவும், பூங்காவுக்குட்பட்ட பகுதியில் 6 அடி ஆழத்திலும், 2 அடி அகலத்திலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“ஆங்கிலம் முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி” – அன்பில் மகேஸ்.!

“ஆங்கிலம் முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி” – அன்பில் மகேஸ்.!

சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

39 seconds ago

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

26 minutes ago

”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…

28 minutes ago

எடப்பாடி பேசுவதை பார்த்து கவலைப்பட வேண்டாம்! பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…

44 minutes ago

”எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியிருக்க வேண்டும்” – அதிபர் டிரம்ப் புலம்பல்.!

வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான…

1 hour ago

“ஓட விருப்பம் இல்லைனா சத்தமா ‘No’ சொல்லு”…கில்லை கிண்டல் செய்த ஜெய்ஸ்வால்!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 85 ஓவர்களில் 359/3…

2 hours ago