அசாமில் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கு இதுவரைக்கும் 13,000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயால் பெரும் இழப்பை சந்தித்து வருகிறோம். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில், நாட்டின் முதன்முறையாக அசாம் மாநிலத்தில் புதிதாக கண்டறியப்பட்டு இருக்கும் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கு இதுவரைக்கும் 13,013 பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் அசாமில் அரசு பன்றிகளை அழிக்காமல் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலில் இருந்து பன்றிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் பன்றிகளின் உயிரிழப்புக்கு காரணமான ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் இருந்துதான் பரவியது என்று கூறப்படுகிறது. இந்த பன்றி காய்ச்சல் முதலில் அருணாசலப் பிரதேசத்தில் தாக்கியது. இதைத்தொடர்ந்து தற்போது அசாமில் பன்றிகளை கொன்று வருகிறது. பின்னர் இந்த ப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கும் தற்போது கொன்று குவித்து வரும் கொரோனா வைரசுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் வைரஸ் மனிதர்களின் உடலில் தங்கி இருந்து பன்றிகளை கொல்லக்கூடியது.
மேலும், நாட்டிலேயே முதலில் அசாமில்தான் இந்த ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ வைரசுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அசாமில் இதுவரை 13,013 பன்றிகள் உயிரிழந்துள்ளது. இதையடுத்து அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அதுல் போரா காஸிரங்கா அங்குள்ள தேசிய பூங்காவிற்கு சென்று பன்றிகள் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அதன்பின் பேசிய அவர், காட்டுப் பன்றிகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்கவும், வீட்டுப் பன்றிகள் பூங்காவுக்குள் நுழையாமல் இருக்கவும், பூங்காவுக்குட்பட்ட பகுதியில் 6 அடி ஆழத்திலும், 2 அடி அகலத்திலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…