VIDEO: பெண் விவசாயியை அறைந்த போலீசார்.! எழுந்தது கடும் எதிர்ப்பு…

குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள படாலா அருகே உள்ள சீமா குடி கிராமத்தில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, பெண் விவசாயியை போலீஸ் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த போராட்டத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணின் கன்னத்தில் போலீஸ் அறைந்தார்.
A Punjab police jawan slapped a woman farmer in the village of Gurdaspur. According to the information, the farmers were opposing the acquisition of land. Will you take away the land of farmers @PunjabPoliceInd @BhagwantMann like this? pic.twitter.com/7Ypw2ZBnlG
— Surjeet Singh Phul (@phul_surjeet) May 18, 2023
இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, நெட்டிசன்கள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து காவல் துறை தரப்பில் என்ன விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால், அந்த பெண் தாக்க முன்றதாகவும், தற்காப்புக்காகவே அறைந்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தின் போது ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த போராட்டத்தால் முதல்வரின் முதன்மைச் செயலர் வேணு பிரசாத் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகளுடனான சந்திப்பு மே 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025