ரூம் மேட்டை கொன்று விட்டு, உடலை வெளியில் தூக்கி எறிந்த வாலிபர் கைது...!

A 26-year-old man has been arrested for killing a roommate and throwing his body outside.

ரூம் மேட்டை கொன்று விட்டு, உடலை வெளியில் தூக்கி எறிந்த 26 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தபா என்னும் பகுதியில் 35 வயதுடைய ராஜு நந்தீஸ்வரர், 26 வயதுடைய தேவன்ஷ் வாகோட் என்பவருடன் ஒரே அறையில் தங்கி வந்துள்ளார். இவர்கள் இருவரும் கார் மெக்கானிக்காக ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து தேவன்ஷ் வாகோட், ராஜுவை கூர்மையான பொருளைப் பயன்படுத்தி குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ராஜு  அந்த இடத்திலேயே பரிதமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ராஜுவின்  உடலை அறைக்கு வெளியே வீசி விட்டு அந்த அறையை சுத்தம் செய்துவிட்டு வாகோட் தூங்கியுள்ளார்.

இந்த அறைக்கு அருகில் தரையில் ஒரு சடலம் கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு இது குறித்த தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின், தேவன்ஷ் வாகோட் தான் குற்றவாளி என கண்டறியப்பட்ட நிலையில், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, வாகோட்டை கைது செய்துள்ளனர்.