பாஜகவில் சேர என்னிடம் பேரம் பேசினர்- பாஜக எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீல்..!

Published by
murugan

காங்கிரஸை விட்டு வெளியேற பாஜக எனக்கு பணம் கொடுப்பதாக கூறினர் என பாஜக எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீல் கூறினார்.

எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீல் 2019 இல் பாஜகவில் சேர்ந்தார். 2019 ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்த 16 எம்எல்ஏக்களில் பாட்டீலும் ஒருவர். இதன் காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கூட்டணி அரசு கவிழ்ந்தது. பாட்டீல் 2018 ஆம் ஆண்டு கக்வாட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்திருந்த ஸ்ரீமந்த் பட்டீல், பெலகாவி காகவாட் சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எடியூரப்பா தலைமையில் அமைந்த அமைச்சரவையில் ஸ்ரீமந்த் பாட்டீல் ஜவுளி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். எடியூரப்பா பதவி விலகியதும், பசவராஜ் பொம்மை முதல்வரானதும் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், பெலகாவி மாவட்டம் கக்வாட் தாலுகாவில் உள்ள ஐனாபூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாட்டீல், காங்கிரஸை விட்டு வெளியேற பாஜக எனக்கு பணம் கொடுப்பதாக கூறினர்.

நான் ஒரு பைசா கூட வாங்காமல் பாஜகவுக்கு வந்தேன். எனக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள். ஆனால் நான் பணத்தை வாங்க மறுத்து, புதிய அரசு அமைந்த பிறகு ஒரு நல்ல பதவியை கொடுக்கச் சொன்னேன். நான் எந்தப் பணமும் வாங்காமல் பாஜகவில் சேர்ந்தேன் என கூறினார்.

வேளாண்துறை: 

கடந்த 20 வருடங்களாக நான் விவசாயம் செய்து வருகிறேன். நானும் ஒரு விவசாய பட்டதாரி. எனக்கு கொடுக்கப்பட்ட ஜவுளி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையை நேர்மையாக கையாண்டேன். அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தில் நான் சேர்க்கப்படுவேன் என்று முதல்வர் பசவராஜா பொம்மை உறுதியளித்துள்ளார். எனக்கு வேளாண் துறை வழங்கப்பட்டால், நான் அதை நன்றாக கையாண்டு மக்களுக்கு உதவுவேன் என கூறினார்.

பிஜேபி தங்கள் எம்எல்ஏக்களை பணம் மற்றும் பதவி மோகத்திற்கு ஈர்த்ததாக  குற்றம் சாட்டிய போது பாஜக அதை மறுத்தது. நாளை தொடங்கும் சட்டசபை கூட்டத்தின் போது காங்கிரஸ் இந்த பிரச்சினையை எழுப்ப வாய்ப்புள்ளது.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago