#Breaking:இனி கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களில் இந்த தேர்வு முறை கிடையாது" – யுஜிசி முக்கிய அறிவிப்பு!

UGC has announced that colleges and universities will no longer have an online exam system.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இனி ஆன்லைன் தேர்வு முறை கிடையாது என்று யுஜிசி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆன்லைன் முறையில் கிடையாது என்றும் மாறாக,இனி நேரடியாக எழுத்து தேர்வாகவே நடத்தப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது.அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் தனது கடிதம் மூலம் இதனை அறிவுறுத்தியுள்ளார்.

மேலும்,கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.