உத்தரபிரதேச அமைச்சர் Brajesh Pathak க்கு கொரோனா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதக் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில், “கொரோனா வைரஸ் அறிகுறிகளுக்குப் பிறகு, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் பரிசோதிக்கப்பட்டேன். சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது . கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அரசாங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார்.
unknown nodeநேற்று , உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்று 1 லட்சத்தை தாண்டின, இறப்பு எண்ணிக்கை 1,817 ஆக உயர்ந்தது. ஏற்கனவே உத்தரபிரதே அமைச்சர் கமல் ராணி வருண் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனாவுக்கு பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அங்கு கொரோனா தொற்று எண்ணிக்கை 1,00,310 ஆக உள்ளது .