இண்டிகோ ஏர்லைன்ஸ் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு விமான கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானப் பயணிகளுக்கு ஒரு நற் செய்தியை வெளியிட்டுள்ளது. அதுஎன்னவென்றால் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு விமான கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த சலுகையின் பெயரை ‘வாக்ஸி ஃபேர்’ (’Vaxi Fare’) என அறிவித்துள்ளது. இந்த 10 சதவீத சலுகை உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை ஊக்குவித்தல், பயணிகள் மீண்டும் பயணம் செய்ய இண்டிகோ இந்தச் சலுகையின் மூலம் முன்முயற்சி எடுப்பதாகத் தெரிகிறது.
இருப்பினும், இந்தச் சலுகையைப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. அதில், இண்டிகோ இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். அதுமட்டுமின்றி, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ’Vaxi Fare’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இந்தச் சலுகையைப் பெற 15 நாட்களுக்குப் பிறகு உங்கள் பயணத் தேதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.
இந்தச் சலுகையுடன் டிக்கெட் பெறும் பயணிகள், விமான நிலையத்தில் ஏறும் போது மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிச் சான்றிதழையோ காட்ட வேண்டும்.
unknown node