மூணாறு நிலச்சரிவில் உள்வாங்கிய கிணறு.
கனமழை காரணமாக மூணாறு அருகே உள்ள ராஜமலை பகுதியில் பயங்கர நிலச்சரிவு:
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா நகரமான மூணாறில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள ராஜமலை பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 12 பேர் மீட்கப்பட்டு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளா இடுக்கி, மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
வயநாடு, இடுக்கி உள்ளிட்ட பகுதியில் கனமழையால் வீடுகளை வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இடுக்கி ராஜமலை பகுதியில் மண்சரிவால் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மூணாறு நிலச்சரிவில் உள்வாங்கிய கிணறு ஒன்றை வீடியோவாக எடுத்து ஒருவர் ட்வீட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார் அந்த வெடியோவில் கிணறு முழுவதமாக நிலத்தில் உள்ளெ உள்வாங்கியது.
unknown node