தெலுங்கானாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் கார் அடித்து செல்லாமல் இருப்பதற்காக காரின் உரிமையாளர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிர்சில்லா நகரத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பல மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்து சென்றுள்ளது.
இதனால் கார் வைத்திருக்கும் ஒருவர், தனது காரை வெள்ளம் அடித்து செல்லாமல் இருப்பதற்காக காரின் நான்கு முனைகளிலும் கயிற்றால் கட்டி அதனை அவரது வீட்டின் மேல்கூரையில் உள்ள கான்கிரீட் தூண்களில் இணைத்துள்ளார். இவர், அவரது கார் வெள்ளத்தில் அடித்து செல்லாமல் செய்த இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
unknown node