தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.இதற்காக மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். அதுமட்டுமின்றி, சென்னையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
unknown nodeஇந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங் இன்று(அக்11) சென்னை வரும்போது கிண்டி, பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் ரயில்கள் நிறுத்தப்பட்டு பிறகு அனுப்பப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.