இந்திய விமானப்படை தளபதியாக வி.ஆர்.சவுதாரி பதவியேற்றார்!!

டெல்லியில் இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக்கொண்டார்.
இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா இன்றுடன் ஓய்வு பெறுவதால், புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரி கடந்த 25ஆம் தேதி நியமிக்கப்பட்டார். ஏற்கனவே, விவேக் ராம் சவுத்ரி விமானப் படையின் துணைத் தளபதியாக இருந்து வந்த நிலையில், புதிய தளபதியாக நியமனம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா ஓய்வு பெற்றதை அடுத்து, டெல்லியில் இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக் கொண்டார். விமானங்களை இயக்குவதில் வல்லவரான இவர், 39 ஆண்டு கால அனுபவம் கொண்டவர். கடந்த 1982ஆம் ஆண்டு டிசம்பரில், சவுத்ரி இந்திய விமானப் படையில் போர் விமானியாக சேர்ந்தார்.
இந்திய விமானப்படையில் மிக்-21, மிக்-23 எம்எப், மிக் 29, சுகோய் 30 எம்கேஐ உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களை இயக்கிய இவர், 3,800 மணி நேரத்துக்கு மேல் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்திய விமானப் படையின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் சந்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025