மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு, ஆகஸ்ட் 31, திங்கள் கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்க மாநிலத்தில் இம்மாதத்தில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதாவது, வரும் வாரம் ஆகஸ்ட் 20,21 மற்றும் 27,28 ஆகிய தேதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
unknown nodeஇந்நிலையில், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுதத்தன் பெயரில், மேற்கு வங்க அரசு இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது.
அதற்க்கு பதிலாக ஆகஸ்ட் 31, திங்கள் கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.