மேற்குவங்கம் :மேற்கு வங்கத்தில் நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதில் ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். தற்பொழுது, இந்த விபத்தில் காயமடைந்த பயணிகளைப் பற்றிய தகவல்களை குடும்பங்கள் தொடர்பு கொள்ள உதவும் ஹெல்ப்லைன் எண்களின் பட்டியலை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
unknown nodeKanchanjungha Express Accident [ image – ani]ரயில் விபத்தில் காயமடைந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு உதவி பெற, கீழே குறிப்பிடப்பட்டுள்ள உதவி எண்களை தொடர்பு கொள்ளவும்.
சீல்டாவில் உள்ள ஹெல்ப் டெஸ்க் எண்
033-23508794 , 033-23833326
ஹெல்ப்லைன் எண்: GHY நிலையம்
03612731621
unknown nodeBoard Displaying Helpline numbers [ image – ani]இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளதாகவும், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடப்பதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
