இந்திய அரசின் விதிமுறைகளை மீறுவதாக பப்ஜி உட்பட 275 செயலிகளுக்கு தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது.
இதன்காரணமாக, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், இந்திய அரசாங்கம் விடுத்த விதிமுறைகளை மீறுவதாக, 275 சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்த ஆலோசனையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, உலகளவில் உள்ள பல இளைஞர்கள் அதிக அளவில் விளையாடும் பப்ஜி கேம், அலி எக்ஸ்பிரஸ், யு லைக், ஜியோமி நிறுவனத்தின் ஸில்லி போன்ற 275 செயலிகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மத்திய அரசின் அந்த அறிவிப்பில் சியோமியின் 14 செயலிகள் உள்ளது. மற்றபடி, Meitu, LBE Tech, Perfect Corp, Sina Corp, Netease Games, Yoozoo Global ஆகிய நிறுவனங்களின் செயலிகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…