கடையை அகற்ற சொல்லியதால் போலீஸ்காரர் மீது தேநீரை ஊற்றிய பெண் கைது!

A woman has been arrested for pouring tea on a policeman after he told her to remove a shop that was illegally set up in Bihar.

பீகாரில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த கடையை அகற்ற சொல்லியதால் போலீஸ்காரர் மீது தேநீரை ஊற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் போலீஸ் அதிகாரி ஒருவர் சட்டவிரோதமாக சாலையோரத்தில் பெண்மணி கடை அமைந்திருப்பதை கண்டு அதை அகற்றுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த பெண்மணி அவர் சொல்வதை கேட்காமல் வாக்குவாதம் செய்துகொண்டே இருந்துள்ளார். காவலரிடம் தொடர்ச்சியாக கடையை அகற்றியே ஆக வேண்டும் என கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண்மணி கையிலிருந்த சூடான தேநீரை காவலர் மீது ஊற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புறக்காவல் பொறுப்பாளர் சுமன் ஜா என்பவர் தான் பாதிக்கப்பட்டவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது, அதன் பின் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.