பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.! பதற்றத்தில் டெல்லி.!

Published by
பாலா கலியமூர்த்தி

தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு பெண் காவலர் ஒருவரை சில மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 முதல் நடைபெற்று வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக ,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி மொத்தமுள்ள உள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மேலும் பாஜக 67 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. டெல்லியில் தேர்தலுக்காக 13,750 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,46,92,136 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண் போலீஸ் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பத்பர்கன்ஞ் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக ப்ரீத்தி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு மெட்ரோ ரயிலில் பயணம் செய்துவிட்டு வீட்டுக்கு இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சில மர்ம நபர் ஒருவர் ப்ரீத்தியின் தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதில் ப்ரீத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் ரோஹினி பகுதியில் உள்ள ப்ரீத்தியின் சடலத்தை மீட்டனர். அதில் ப்ரீத்தியை மர்ம நபர் 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளது என்று தெரிய வந்தது.

இதனிடையே ப்ரீத்தி 2018-ம் ஆண்டு உதவி ஆய்வாளர் சேர்ந்தார். இவர் ஹரியானா மாநிலம் சோனேபட்டை சேர்ந்தவர். அவரது காவலர் வேலைக்காக ரோஹினி பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார் என குறிப்பிடப்படுகிறது. இந்த சம்பவம் இடத்தில இருந்து சிசிடிவி கேமராக்களை சேகரித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பெண் காவலர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நாட்டுத் துப்பாக்கிகள் சுலபமாக கிடைப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்று டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

1 hour ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

2 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

3 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

3 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

4 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

5 hours ago