வீட்டில் ஒருவருக்கு வேலை.. மாதம் ரூ.3,000 உதவித்தொகை – டெல்லி முதல்வர் அதிரடி வாக்குறுதி!

Aam Aadmi Party (AAP) leader Arvind Kejriwal has promised that if the party comes to power, it will provide jobs to the youth.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இன்று கோவா சென்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் கோவாவின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இளைஞருக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை, மாதம் ரூ.3,000 வேலையின்மை உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அதிரடியான வாக்குறுதியை அறிவித்துள்ளார்.

மேலும், கூடுதலாக, ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்தார். அதன்படி, அரசு மற்றும் தனியார் துறையில் 80 சதவீத வேலைகள் கோவா மாநில இளைஞர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.