விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் கருவுறுதலுக்கு.. X குரோமோசோம் மரபணு அவசியம் – புதிய ஆய்வு!

சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular and Molecular Biology (CCMB) மற்றும் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து முதன்முறையாக X குரோமோசோம் (TEX13B) மரபணு ஆண்களின் விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறிந்துள்ளனர்.
ஆய்வின் படி, ஏழு ஜோடி ஆண்களில் ஒருவர் மலட்டுத்தன்மையுடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு சமீபத்தில் மனித இனப்பெருக்கம் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஏழு ஜோடி ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், TEX13B என்கிற மரபணுவில் இரண்டு காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று மலட்டுத்தன்மையுள்ள ஆணிடம் மட்டுமே கண்டறியப்பட்டது. மற்றொன்று கருவுற்ற கட்டுப்பாட்டு ஆண்களுடன் ஒப்பிடும்போது மலட்டுத்தன்மையுள்ள ஆணிடம் இது தென்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆய்வின்படி விந்தணுக் குறைபாடுள்ள மலட்டுத்தன்மையுள்ள ஆண்களை எளிதாக கண்டறியவும், அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். TEX13B மரபணு X குரோமோசோமில் உள்ளதாம். அதாவது CCMB-ன் இயக்குநர் வினய் குமார் நந்திகூரி இது பற்றி விவரிக்கையில், “X குரோமோசோம் மரபணுவானது அனைத்து ஆண்களும் தங்கள் தாயிடமிருந்து மட்டுமே பெறுகிறார்கள், அவர்களது தந்தையிடமிருந்து இல்ல.