விமான விபத்து செய்தி அறிந்து மனவேதனையடைந்தேன் – தமிழக முதல்வர் ட்விட்..!

நேற்று இரவு கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள்,

நேற்று இரவு கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள், ஒரு குழந்தை உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த  விபத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலர் தங்கள் வருத்தங்களையும், ஆறுதலையும்  பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், கோழிக்கோட்டில் விமான விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு மனவேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மனவலிமை கிடைக்கவும், காயமடைந்தவர்கள் விரைவாக மீண்டு வர கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

unknown node