இந்திய ஹாக்கி அணிக்கு 1 கோடி ரூபாய் பரிசு.! முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

Minister Udhaynidhi stalin - Indian Hockey Team

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை  ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. இந்த தொடரில், தோல்வியையே சந்திக்காத இந்தியா அணியும் மலேசியா அணியும் இறுதி போட்டியில் மோதின. இதில் இந்திய அணி  4-3 என்ற கோல் கணக்கில் மலேசியா அணியை வீழ்த்தி 4வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணிக்கு வெற்றி கோப்பையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் வழங்கினர். உடன் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.

4வது முரையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, தமிழக அரசு சார்பில் வீரர்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் பரிசு தொகையும், பயிற்சியாளர்களுக்கு 2 1/2 லட்ச ரூபாய் பரிசு தொகை என மொத்தமாக தமிழக அரசு சார்பில் 1.10 கோடி ரூபாய் அளவுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. அதே போல ஹாக்கி இந்தியா அமைப்பில் இருந்து வீரர்களுக்கு 3 லட்ச ரூபாய் பரிசு தொகையும், பயிற்சியாளர்களுக்கு 1 1/2 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது.

இறுதி போட்டி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீரர்களுக்கு 5 லட்சம் பயிற்சியாளர்க்ளுக்கு பரிசு என கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்த தமிழக முதல்வருக்கு, நன்றி. போட்டிகள் நடைபெற்ற அத்தனை நாளும் அரங்கத்தை ஹவுஸ்புல்லாக வைத்த ரசிகர்களுக்கு நன்றி. இதன் மூலம் ஹாக்கி விளையாட்டு போட்டிக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்