காலமானார் 10 ரூபாய் மருத்துவர்...! துயரத்தில் ஆழ்ந்த மக்கள்...!

பழைய வண்ணாரப்பேட்டையில் ரூ.10-க்கும் மருத்துவ சிகிச்சை வழங்கிய மருந்துவர் காலமானார்.

பழைய வண்ணாரப்பேட்டையில் ரூ.10-க்கும் மருத்துவ சிகிச்சை வழங்கிய மருந்துவர் காலமானார்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் ரூ.10-க்கும் மருத்துவ சிகிச்சை  வழங்கியவர் கோபாலன். சுமார் அரை நூற்றாண்டு காலமாக எளிய மக்களை அரவணைத்து, சிகிச்சை அளித்து வந்தவர். வாடா சென்னை மக்களின் வலிகளை போக்கும் மருத்துவராக வளம் வந்தவர் கோபாலன்.

மக்களிடம் ரூ.10 மட்டும் சிகிச்சை கட்டணமாக பெற்று கொண்டு, சிகிச்சை அளித்து  வந்தார். நோயாளிகளிடம் பணம் இல்லையென்றால், அந்த 10 ரூபாயை கூட வாங்க மாட்டார். இவ்வாறு, மனிதநேயம் மிக்க மருத்துவர், சில நாட்களுக்கு முன்  உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவு அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.