நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 10 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 10 நாகை மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் திரிகோணமலை கடற்படை தளத்தில் ஒப்படைத்தனர். மீன்வர்களோடு சேர்ந்து அவர்களின் படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றி திரிகோணமலை கடற்படை தளத்தில் ஒப்படைத்தனர்.
