144 தடை உத்தரவை மீறியதாக தென்காசியில் 300 பேர் மீது 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு!

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் நலனை கருத்தில் கொண்டு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என கூறியிருந்தார். ஆனாலும், பலர் உத்தரவை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிகின்றனர். 

இதனையடுத்து, 144 தடை உத்தரவை மீறியதாக தென்காசியில் இருசக்கர வாகனத்தில் சாலைகளில் சுற்றியதற்கு காவல் துறை  300 பேர் மீது 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்,  வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்