144 தடை மீறல்: தமிழகத்தில் கைது எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.!

Default Image

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 144 தடை (ஊரடங்கு) அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அவர்கள் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்யப்படுகிறது. 

நேற்று வரை ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 90,918 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். மேலும் வாகனங்களில் தேவையின்றி சுற்றிய 69,589 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.24,60,194 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தண்டியுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,01,964 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 78,240 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில். ரூ.27,73,794 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்