எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் 17 மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. அவர்களது 2 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக மீனர்வகளை கைது செய்யும் நடவடிக்கை தொடர் கதையாகி வரும் நிலையில், சமீபத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபர்அனுரகுமாரா திசநாயக்கேவிடம், தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக பிரதமர் மோடியே பேசி இருந்தார். இருந்தாலும், மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை என்று இந்த கைது நடவடிக்கை மூலம் தெரிகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025