தக்காளி பெட்டிக்கு அடியில்"2 டன் செம்மரக்கட்டை கடத்தல்"மடக்கி பிடித்த காவல்...!!!

2 டன் செம்மரக்கட்டைகள் வேனில் கடத்தப்பட்டது.இந்தவேனை காவல்துறை மடக்கி பிடித்துள்ளனர்.

2 டன் செம்மரக்கட்டைகள் வேனில் கடத்தப்பட்டது.இந்தவேனை காவல்துறை மடக்கி பிடித்துள்ளனர்.

செம்மரக்கட்டைகள் காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் அருகே சரக்குவேனில் கடத்திவரப்பட்டது.இதில் கடத்திவரப்பட்ட 2 டன் செம்மரக்கட்டைகளை போலிசார் பறிமுதல் செய்தனர்.

unknown node

மறைமலைநகர் அருகே செட்டிபுண்ணியம் பகுதியில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுட்டிருந்தனர்.அப்போது மகேந்திராசிட்டி அருகே வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட சரக்குவேனை போலீசார் மடக்கினர்.

இந்நிலையில் ஓட்டுநனர் சரக்குவேனை சாலையில் நிறுத்திவிட்டு தப்பி சென்ற நிலையில், அதனை சோதனை செய்தபோது தக்காளி பெட்டிகளுக்கு அடியில் மறைத்து செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சரக்குவேன் மற்றும் 2 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, கடத்தல்காரர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

DINASUVADU