தமிழகத்தில் புதிதாக 25 நகர்ப்புற சுகாதார மையங்களை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது என அமைச்சர் தகவல்.
தமிழ்நாட்டில் மத்திய அரசின் சார்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று சட்டமன்றத்தில் பேசிய அவர், தமிழகத்தில் புதிதாக 25 நகர்ப்புற சுகாதார மையங்களை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க விதி உள்ளது. ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 2 சுகாதார மையங்களுக்கு இடையே 8 கிமீ மேல் குறைந்தபட்சம் இடைவெளி அவசியம்.
மேலும், மக்கள் தொகை, இடைவெளி ஆகிய விதிகளை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். தமிழகத்தில் தொலைதூர கிராமங்களில் மருத்துவ வசதியை மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்குவதற்கு ஏதுவாக, 389 மருத்துவ வாகனங்கள் இயக்கப்படுவதாகவும் சட்டப்பேரவையில் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தெரிவித்தார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…