தமிழநாடு காவல்துறையில் 4 கூடுதல் எஸ்.பி.க்கள் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அரியலூர் ஏ.எஸ்.பி. மலைச்சாமி சென்னை மாவட்ட சொத்து பிரிவின் அமலாக்கத்துறை எஸ்.பி.யாக பதிவு உயர்த்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட சிறப்பு போலீஸ் படை ஏ.எஸ்.பி. ரவிச்சந்திரன் திருச்சி நகர காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளர். விழுப்புரம் காவலர் தேர்வு பள்ளி ஏ.எஸ்.பி. ரமேஷ்பாபு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் சைபர் குற்றப்பிரிவு ஏ.எஸ்.பி.செல்லபாண்டியன் ஆவடி சிறப்பு போலீஸ் பட்டாலியன் கமாண்டன்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
unknown node