மதுரையில் பயங்கரம்.! கண்டெய்னர் லாரி – கார் மோதி கோர விபத்து.! 4 பேர் பலி.!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சாம் டேவிட்சன், மார்ட்டின், கமலநாதன் ஆகியோர் காரில் நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மதுரை,

Accident in Thirumangalam

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சாம் டேவிட்சன், மார்ட்டின், கமலநாதன் ஆகியோர் காரில் நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மதுரை, திருமங்கலம் அடுத்த மையிட்டாண்பட்டி விலக்கு அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்தது.

கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை தாண்டி, எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கி கண்டெய்னர் லாரி ஒட்டி வந்த மதுரையை சேர்ந்த செல்வகுமார், காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் என 4 பெரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.