8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 63 வயது கொடூரன்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்னும் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். திருவத்திரம் என்னும்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்னும் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். திருவத்திரம் என்னும் பகுதியில், நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூட்டுறவு வீட்டுவசதி வாரிய கடன் சங்கத்தின் செயலாளராக பணிபுரிந்து ஒய்வு பெற்றுள்ளார்.இவர் பாதிக்கப்பட்ட மாணவியிடம், கடந்த சில மாதங்களாக நெருங்கி பழகியுள்ளார். மேலும், அவர் அந்த மாணவியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். அம்மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து, கர்ப்பமான மாணவி, தனது தாயாரிடம் நடந்த எல்லாவற்றையும், சொல்லி அழுதுள்ளார்.உடனடியாக மனைவியின் தயார், செய்யாறு அணைத்து மகளீர் காவல் நிலையத்தில், நடராஜன் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில், காவல்துறையினர் நடராஜனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.