77வது சுதந்திர தின விழா நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து, மாநில முதல்வர்கள், மாநில தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்ற உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டையில் ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு, கோட்டை கொத்தளத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றினார். அதன் பிறகு மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.
