நெல்லையில் பரபரப்பு.! இளைஞர் படுகொலை.! காதல் விவகாரம் காரணமா.?

நெல்லை மாவட்டத்தில் 19 வயது இளைஞர் படுகொலை செய்ப்பட்டுள்ளார். காதல் விவகாரம் காரணமா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த முத்தையா எனும் 19 வயது இளைஞர் ஒருவர் நேற்று வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். வீட்டில் இருந்து சென்ற அவர் வெகு நேரமாக வீடு திரும்பாத காரணத்தால், அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்
அப்போது ஊருக்கு அருகில் உள்ள ஒரு ஓடை பகுதியில் வயிறு மற்றும் கழுத்துபகுதியில் கத்தி போன்ற கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு திசையன்விளை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்ட்டு அவரது உடல் பாளையம்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த முத்தையா , வேலை பார்க்கும் ஊரில் வேற்று சாதி பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த கொலைக்கு காதல் விவகாரம் காரணமா.? அல்லதுவேறு காரணமா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.