2022-23ம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையால் உத்தவிடப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த கலந்தாய்வு நிறுத்தப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeTeacherTransferCouncelling [Image source : kalviseithi]
