பொதுத்துறை வங்கிகளில் அம்பேத்கர் படத்தை வைக்கலாம்! – ஐகோர்ட்

பொதுத்துறை வங்கிகளில் அம்பேத்கர் படத்தை வைக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
சென்னை எஸ்பிஐ வங்கியில் அண்ணல் அம்பேத்கரின் படத்தை வைத்ததற்காக கிளை உதவியாளர் கௌரிசங்கர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆணை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் சுற்றறிக்கையில் அண்ணல் அம்பேத்கர் படத்தை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளதாக மனுதாரர் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.
மத்திய பொருளாதார விவகாரத்துறை சுற்றறிக்கையின்படி தேசிய மைய்யமாக்கப்பட்ட வங்கிகளில் அம்பேத்கர் படத்தை வைக்கலாம் என்று உயர்நீதிமன்றம்நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் வங்கியில் அம்பேத்கர் புகைப்படம் வைத்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டவருக்கு மீண்டும் பணிநியமனம் வழங்க வேண்டும் என்றும் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025