முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன்.!

Arikomban

முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது அரிக்கொம்பன்.

கடந்த மாதம் கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் சுற்றி திரிந்த அரிக்கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் தமிழக எல்லையில் விட்ட நிலையில், இந்த யானை தேனி, கம்பம் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்தது. இந்த யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து, யானையை பிடிக்க வனத்துறையினர் கடந்த சில வாரங்களாக முயன்று வந்தனர். கோடை மழை பெய்து வந்ததால் யானையை பிடிக்கும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி நேற்று பிடித்தனர். தற்போது அரிக்கொம்பன் யானை பிடிப்பட்டதையடுத்து, ஏற்கனவே உத்தரவிட்டிருந்த 144 தடை நீக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிடிப்பட்ட அரிக்கொம்பன் யானை நெல்லை மாவட்டம் முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள, மேல கோதையாறு பகுதியில் வனத்துறையினால் விடப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies