ஓவியப் பிரியர்கள் கவனத்திற்கு… சென்னையில் 3 நாட்கள் முக்கிய திருவிழா..!

Published by
மணிகண்டன்

சென்னை : சென்னையில் அரசு கலைத்துறை சார்பில் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஓவியம் மற்றும் கலை வல்லுனர்களின் படைப்புகள் ஆகியவை விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பில், கலை பண்பாட்டுத் துறை மற்றும் சென்னை அரசு கவின்கலைக் கல்லூரி சார்பில் தமிழக ஓவியச் சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதரம் மேம்படும் வகையில் “சென்னையில் ஓவியச் சந்தை” நடைபெற உள்ளது.

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் நாளை (ஆகஸ்ட் 3) முதல் ஆகஸ்ட் 5 வரையில் 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த ஓவியச் சந்தையில் தமிழகத்தைச் சார்ந்த கலை வல்லுநர்களின் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப் படைப்புகள் விற்பனைக்காக 100 அரங்குகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இந்த “ஓவியச் சந்தையை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நாளை (ஆகஸ்ட் 3) காலை 11 மணியளவில் துவங்கி வைக்க உள்ளார். சென்னையில் முதன்முறையாக மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த ஓவியச் சந்தையை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு விருப்பமான கலைப் படைப்புகளை வாங்கிச் செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

1 hour ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

4 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago