மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 4,308 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் கூடுதலாக 1,450 மருத்துவ மாணவர சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் பேசிய அமைச்சர், ரூ.1,018.85 கோடியில் 19 மருத்துவமனைகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் 12 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரூ.15 கோடியில் புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 4,308 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார். இதில் 1,021 உதவி மருத்துவர்கள், 3,287 மருத்துவம் சார்ந்த இதர பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறினார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ரூ.423.64 கோடியில் ஒருங்கிணைந்த ஆய்வக சேவைகள் தொடங்கப்படும் என்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை காலை 7 மணிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் மருத்துவம் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர், முழு உடல் பரிசோதனை மையம் அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்கும் சாதாரண விஷயம், அதற்கு போய் அம்மாவின் பெயரை அதிமுக வைத்தது. பெயர் மாற்றும் அளவிற்கு, காழ்ப்புணர்ச்சி திமுக அரசுக்கு இல்லை. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றால் வயிறு எரிகிறது, அற்புதமான கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றியுள்ளனர்.
ஆட்சி அமைந்ததும், மருத்துவமனையை மாற்றிவிடுவார்கள் என்றனர். ஆனால், புற்றுநோய் ரோபோடிக் சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. மருந்துகள் பற்றாக்குறை என்பதே தமிழ்நாட்டில் இல்லை. முந்தைய அரசு போல் தேவையற்ற மருந்துகளை வாங்கி இருப்பு வைப்பதில்லை, தேவையானவை மட்டும் தான் வாங்குகிறோம். மேலும், தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 1,74,831 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…