#BREAKING: முக ஸ்டாலின் உள்பட 1,600 பேர் மீது வழக்குப்பதிவு.!

Police have registered a case against 1,600 people, including Mk Stalin, who went on a hunger strike in support of farmers in Chennai.

சென்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்திய திமுக தலைவர் முக ஸ்டாலின், கனிமொழி, டிஆர் பாலு, திருநாவுக்கரசர், திருமாவளவன், கே பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முக ஸ்டாலின் உள்ளிட்ட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அரசின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் நுங்கப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.