கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவுப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன் பெரும் வகையில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 2021 மார்ச் 21 வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு மட்டும் இந்த அறிவிப்பு பொருந்தும்.
இதுதொடர்பாக பேரவையில் பேசிய முதல்வர், ஒருசில இடங்களில் முறைகேடாக நகைக்கடன் பெற்றுள்ளார்கள். அதேபோல் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் நடைக்கடன் வாங்கியுள்ளார்கள். இதெல்லாம் களையப்படும் என்றும் உண்மையான பட்டியல் ஏற்கனவே சேகரிப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், கூட்டுறவு சங்கம் சார்பாக யாருக்கெல்லாம் கடன் தள்ளுபடி என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார். முதலமைச்சரின் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு, திமுக தேர்தல் வாக்குறுதியில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…