#BREAKING: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு – ஆறுமுகசாமி ஆணையம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவு பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி புகழேந்தி கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பு, அப்போலோ தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பிடமும் ஏற்கனவே ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்திருந்தது. இந்த நிலையில் அணைத்து தரப்பு விசாரணையும் நிறைவு பெற்றுள்ளது.
இதனால் அடுத்தகட்டமாக விசாரணை அறிக்கையை நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்ய உள்ளது. அதன்படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை ஜூன் 24-க்குள் தமிழக அரசுக்கு தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டு உள்ளதாகவும், தற்போது விசாரணை நிறைவு பெற்றுள்ள நிலையில் நாளை முதல் அறிக்கை தயார் செய்யப்படும் என்றும் தகவல் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 159 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025