#BREAKING: விவசாயிகள் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு நாளை கடைசி நாள் – தமிழக அரசு

Government of Tamil Nadu announces that samba paddy crops should be insured by 2021-22.

2021-22 ஆம் ஆண்டில் சம்பா நெற்பயிர்களுக்கு நாளைக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு.

சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாதவர்கள் நாளைக்குள் பயிர் காப்பீடு செய்திடுக என்று தமிழக வேளாண், உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது. காப்பீட்டிற்கான கால அவகாசத்தை நீடிக்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழக அரசு விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டில் சம்பா நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் இன்றும், நாளையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.