திருமணத்தை நிறுத்த காதலனை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட மணப்பெண் ..!

Default Image

சென்னை அயனாவரத்தை சார்ந்த பெண் ஒருவருக்கு திருமண ஏற்பட்டு செய்யப்பட்டு இருந்தது.இதை தொடர்ந்து மாப்பிள்ளையின் போனிற்கு ஒரு புதிய நம்பரில் இருந்து புகைப்படங்கள் வந்து உள்ளது.
அந்த புகைப்படத்தை பார்த்த மாப்பிள்ளை தனது பெற்றோரிடம் சென்று தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணிற்கு வேறு ஒருவருடம் தொடர்பு இருப்பதாக கூறி அவருக்கு வந்த புகைப்படத்தை மாப்பிள்ளை தனது பெற்றோரிடம் காட்டி உள்ளார்.
அதில் மணப்பெண் வேறு ஒருவருடன் இருப்பதை பார்த்த மாப்பிள்ளையின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தி அடுத்த மறுநாளே உறவுக்கார பெண்ணுடன் தனது மகனுக்கு திருமணம் நடத்தி வைத்து உள்ளனர்.
இந்நிலையில் புகைப்படத்தை யார் அனுப்பி இருப்ப என எண்ணி மணப்பெண்ணின் தந்தை போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளார்.மாப்பிள்ளைக்கு வந்த எண்ணை வைத்து விசாரித்த போது ஒரு இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சில உண்ணமைகள் வெளியானது.புகைப்படத்தை அனுப்பிய இளைஞரும் , மணப்பெண்ணும் காதலித்து வந்து உள்ளனர்.இவர்களின் காதலை மணப்பெண்ணின் பெற்றோர் ஏற்கவில்லை இதனால் திருமணத்தை நிறுத்த மணப்பெண் ஒரு  திட்டம் தீட்டியுள்ளார்.
அது என்னவென்றால் மாப்பிள்ளையின் எண்ணை தனது காதலனுக்கு அனுப்பி காதலனுடன்  இருவரும் இருக்கும் புகைப்படத்தை மாப்பிள்ளைக்கு அனுப்ப சொல்லி இருக்கிறார்.அதன் படி காதலன் இருவரும் இருக்கும் புகைபடத்தை அனுப்பி உள்ளார்.
இதைத்தொடர்ந்து போலீசார் மணப்பெண்ணையும் ,காதலனையும் அறிவுரை அளித்து அனுப்பி வைத்தனர்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ganga Expressway IAF
pm modi - kerala port
Retro
ADMK Chief secretary Edappadi Palanisamy
Minister Anbil Mahesh
US Vice President JD Vance